சென்னை:வரும் 8ம் தேதி நடக்க இருந்த, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, பிப்., 19ம் தேதிக்கு தள்ளி வைத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தொடக்க கல்வித் துறையில், 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் (ஏ.இ.இ.ஓ.,), போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, 68 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். போட்டித் தேர்வு, வரும் 8ம் தேதி நடக்க இருந்தது.





