புகழ்பெற்ற ஒரு நிறுவனம் திடீரென நான்காகப் பிளவுபட்டு, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனிப் பெயர்ப்பலகை, தனி நிர்வாகம், தனி வருமானம் என்றாகிவிட்டால் எல்லோருக்கும் முதலில் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அத்தகைய அதிர்ச்சியை அரசியல் அரங்கில் ஏற்படுத்தியிருக்கிறார் செல்வி மாயாவதி. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்போவதாக அதன் முதல்வர் மாயாவதி அறிவித்ததுதான் அதிர்ச்சிக்குக் காரணம்.





