வந்து போனவர்கள்

வியாழன், 12 ஜூலை, 2012

TNPSC - தமிழக வரலாறு தகவல்கள்


தமிழ்நாடு ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவரலாற்றைக் கொண்டுள்ளதுஇங்கே வாழுகின்ற திராவிட இனமக்களின் தோற்றம் (origin)
 தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள்நிலவுகின்றனசிலர்ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவிவாழ்ந்திருத்த திராவிடர்சிந்து வெளி நாகரீகத்துக்குஉரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்றுகருதுகிறார்கள்இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு,ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப்படுகின்றதுஇக் கொள்கைப்படிவடக்கிலிருந்து வந்த ஆரியஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களானதமிழ்நாடுஆந்திரப் பிரதேசம்கர்நாடகம்கேரளா ஆகியவைஅடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக்கருதப்படுகின்றதுவரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும்,தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்டகொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதுஎனலாம்.

இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டையதிராவிட நாடுபல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்ததுஇவற்றைக்காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன.இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள்பாண்டியர்சேரர்,சோழர்பல்லவர்சாளுக்கியர்விஜய நகரத்தார்நாயக்கர்என்போராவர்.
பாண்டியர்களுடைய காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்குமுன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றதுமதுரைமுதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால்கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றதுமேலே குறிப்பிடப்பட்டமதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்துபிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்துபோனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாகஅறியக்கிடக்கின்றதுபாண்டிய நாடு கல்வியிலும்வணிகத்திலும்சிறந்து விளங்கியதுஇவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகியகிரேக்கரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்புகொண்டிருந்தனர்அவ்வப்போது பல்லவர்களாலும்,சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும்தமிழ்நாட்டின் பலம்மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.

கி.பி 1 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை

முற்காலச் சோழர் கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம்நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர்.இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன்விளங்கினான்தற்காலத் தஞ்சாவூர்திருச்சிராப்பள்ளி ஆகியமாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச்செலுத்திய இவர்கள்யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்..

கி.பி 4 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில்சிறந்த கோவில்களைஅமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர்இவர்கள்தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர்.காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின்பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர்.இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக்கருதப்படுகின்றதுமுதலாம் மகேந்திரவர்மனும்அவனுடையமகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கியஅரசர்களாவர்திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயேஉருப்பெற்றதுஇறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஆவான்.இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்தசோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில்முடிவுக்கு வந்ததுஇக்காலகட்ட பகுதியில் (கி.பி. 300- கி.பி. 600)பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.

கி.பி 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்குவந்தனர்இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனானஇராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர்,தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர்.இவர்களுடைய பேரரசுமத்திய இந்தியாஒரிஸ்ஸாமற்றும்வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்ததுஇராசராசசோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேரமன்னர்களை வீழ்த்தினான்அத்துடன் பாண்டிய அரசிடமிருந்துஇலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான்இராசேந்திரசோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்,இலட்சத்தீவுகள்சுமத்ராஜாவாமலேயா மற்றும் பெகுதீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான்.அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளைஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான்தன் வெற்றியைக்கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும்தலைநகரை உருவாக்கினான்பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில்சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

14 ஆம் நூற்றாண்டு

14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகுபாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர்ஆயினும் அந்த எழுச்சிநீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316ல் வடக்கிலிருந்துபடையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள்மதுரையைமுற்றுகையிட்டு சூறையாடினர்இஸ்லாமியர்களின் படையெடுப்புசோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்திஇஸ்லாமிய "பாமினிஆட்சிக்கு வித்திட்டதுஇஸ்லாமியப்படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள்சேர்ந்து விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தனஇப்பேரரசின்பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிடநாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர்.ஹம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விஜய நகரப் பேரரசுசெல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.
ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில்தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விஜயநகரஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டுஅவர்கள் ஆட்சிக்கடங்கியபகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டது.நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும்செழிப்புடனும் விளங்கியது.தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்தநாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்காலகோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.
இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின்ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின்ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாகஇருந்ததுஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின்ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும்வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

17 ஆம் நூற்றாண்டு

1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் (தற்பொழுது சென்னைஎன்று அழைக்கப்படுகிறதுகிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவியபிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதிதொடங்கியதுதமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்தசச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு ,அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர்.தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்லஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததுஆங்கிலேயர்அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களைஎதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர்இருந்தனர்வீர பாண்டிய கட்டபொம்மன்மருது பாண்டியர்,பூலித்தேவன் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

20 ஆம் நூற்றாண்டு

1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோதுமதராஸ் மாகாணம்மதராஸ் மாநிலம் ஆனதுதமிழ்நாடுகடலோர ஆந்திரப் பகுதிகள்,மேற்கு கேரளம்தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள்ஆகியவை மதராஸ் மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் மதராஸ்மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திரமாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராஸ்மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநிலஎல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம்மதராஸ் மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும்கர்னாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1968இல்,மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்செய்யப்பட்டது.

பாரம்பரியம்

தமிழ்நாடுஇன்றும் செழிப்புடன் விளங்கும்வளமான இலக்கிய,இசைநடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றதுஇதுஇந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்டமாநிலங்களுள் ஒன்று.
சுப்பிரமணிய பாரதிசிதம்பரம்பிள்ளைசிவிராமன்,சுப்பிரமணியன் சந்திரசேகர்ஆர்கேநாராயண்சீனிவாசராமானுஜன்அப்துல் கலாம் முதலியோர் மாநிலத்தின்பிரபலமானவர்களுள் சிலராவர்இவர்களோடுகண்ணகி,திருவள்ளுவர்ஒளவையார்கம்பர்இராஜராஜ சோழன் போன்றமுற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாவர்அலன்டூரிங்எனும் கோட்பாட்டுக் கணினியியல் அறிவியலாளரும்இளம் வயதில் மதராஸ் பிரெசிடென்சியில் இருந்தவரே.

அரசியல்

தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234.நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தனதற்பொழுதுஒரு அவை மட்டுமே உள்ளதுமாநகராட்சிகள்நகராட்சிகள்,பேரூராட்சிகள்ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்குஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிகள் தேர்ந்துஎடுக்கப் படுகின்றனர்.
தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிடமுன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவை விளங்குகின்றன.காங்கிரஸ் கட்சிபாரதியஜனதா கட்சிமார்க்சிய கட்சிகள்பாட்டாளி மக்கள் கட்சி மற்றும்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் விடுதலைச்சிறுத்தைகள்புதிய தமிழகம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கமுக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.
.வெ.ராமசாமி (தந்தை பெரியார் என்று அறியப்படுகிறார்) 1944இல்தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949இல்திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு., D.M.K) சிஎன்.அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947இல் இந்திய விடுதலைக்குப்பிறகு 1967 வரை தமிழ் நாட்டை காங்கிரஸ் கட்சி ஆண்டது.1967இல்திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972இல்திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்துஅண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தை (A.D.M.K,.தி.மு.கோ.இராமச்சந்திரன் [M.G.R] தோற்றுவித்தார். 1977இல் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப்பிடித்தது.

1967 முதல் 2001இல் கடைசியாக நடந்த சட்ட மன்ற தேர்தல் வரைதி.மு. அல்லது .தி.மு. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று(அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள்)பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன.தமிழ் நாட்டுசட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்துபோட்டியிடுவது உண்டு என்றாலும்இது வரை தனிக் கட்சிஆட்சியே நடை பெறுகிறதுஇருப்பினும்தமிழக கட்சிகள் நடுவண்அரசில் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும் பங்கேற்கவும்செய்கின்றன.

தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு,தாழ்த்தப்பட்டோர்மற்றூம் சிறுபான்மை சமூகத்தின் நலன்இட ஒதுக்கீடுகாவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்சினைவிவாசாயிகள்பாமரர் மற்றும்நலிவடைந்த பிரிவினர் நலன்ஊழல் ஆகியவை தமிழ் நாட்டுஅரசியலில் முக்கியத்துவம் உள்ளவை.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More